மண்சரிவு அபாயம் காரணமாக, தலவாக்கலை வட்டகொட யொக்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (16) முதல் தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
பாடசாலைக்கு மேலே உள்ள மலையின் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து பாடசாலை கட்டிடங்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக அருகிலுள்ள வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
