காருக்குள் உல்லாசம்.. இயற்கை உபாதை கழிக்க வந்த பெண்களிடம் கொடூரம்.. CCTV வீடியோவால் அதிர்ச்சி..

 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பயணிக்கும் இளம் ஜோடிகளுக்கு கொடூர அதிர்ச்சி! சாலை ஓரத்தில் காருக்குள் நெருக்கமாக இருக்கும் தருணங்களை CCTV கேமராவில் பதிவு செய்து, அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.


இந்த ஊழலின் பின்னணியில் சுங்கச்சாவடி மேலாளர் அசுதோஷ் விஸ்வாஸ் என்ற கொடூரன் இருப்பது தெரிய வந்துள்ளது. இது ஒன்று போதாதென்று, அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மற்றும் போலீசாரையும் இவர் மிரட்டி வசூலித்திருப்பது விசாரணையில் திடுக்கிடும் உண்மையாக வெளியாகியுள்ளது!


341 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த விரைவுச்சாலை, லக்னோவிலிருந்து காசிபூர் வரை செல்கிறது. ஒவ்வொரு 2 கிலோமீட்டருக்கும் உயர் தெளிவு திறன் கொண்ட சுழலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 


இவை அனைத்தும் பாலியாப்பூரில் உள்ள சுங்கச்சாவடி கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், இந்த பாதுகாப்பு அமைப்பையே தனது கொள்ளைக்கு கருவியாக்கியுள்ளார் அசுதோஷ் விஸ்வாஸ்!


சாலையில் பயணிக்கும் இளம் ஜோடிகள், தங்கள் கார்களை ஓரமாக நிறுத்தி தனிமையில் இருக்கும் போது, அந்த காட்சிகளை CCTVயில் பார்த்த விஸ்வாஸ், உடனடியாக அங்கு சென்று வீடியோக்களை காட்டி மிரட்டுகிறார். 


"இதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன்!" என்று அச்சுறுத்தி பணம் கேட்கிறார். பயந்து போன ஜோடிகள் அவர் கேட்ட தொகையை கொடுத்து விடுகின்றனர்.


ஆனால், சில சமயங்களில் பணம் வாங்கிய பிறகும் அந்த வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றி அவர்களை அவமானப்படுத்தியுள்ளார் இந்த கொடூரன்! இந்த கொடுமைக்கு ஆளான பலர், சுல்தான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விரைவுச்சாலை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.


ஆதாரங்களுடன் வழங்கப்பட்ட புகார்களை அடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மேலும் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள், இயற்கை உபாதைகள் கழிக்கச் செல்லும் போது அவர்களின் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்திருப்பது தெரிய வந்துள்ளது.


இது மட்டுமா? சாலையில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் போலீசாரின் காட்சிகளை CCTVயில் பதிவு செய்து, அவர்களிடமிருந்தே ₹2000 வசூல் செய்துள்ளார் விஸ்வாஸ்! மேலும், விபத்துகளில் சிக்கிய வாகனங்களை தப்பிக்க வைக்க, அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அந்த CCTV காட்சிகளை அழித்திருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.


இந்த ஊழல் வலையில் யாரும் தப்பவில்லை - இளைஞர்கள், பெண்கள், போலீசார் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்! இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர், ஆனால் விஸ்வாஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிட மறுத்துள்ளனர். இந்த கொடூர ஊழல் எப்போது முடிவுக்கு வரும்?

பாதுகாப்பு என்ற பெயரில் தனியுரிமையை பறிக்கும் இத்தகைய கொள்ளையர்களுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு காத்திருப்போம்!


Summary in English : Uttar Pradesh toll manager Ashutosh Vishwas blackmailed young couples using CCTV footage of intimate moments in cars on Purvanchal Expressway, extorting money by threatening to post videos online. He also targeted nearby village women and girls, extorted police, and deleted accident recordings for bribes. Victims complained; police are investigating intensely.

 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post