Type Here to Get Search Results !

மலையகத்தை உலுக்கிய மற்றுமொரு சோகம்-தமிழ் பெண் பலி

 

கொழுந்து பறிக்கும் போது குளவிக் கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண் பலி நானுஓயா கிடிமிட்டி பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். அவர் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது, குளவி கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நானுஓயா கிடிமிட்டி பகுதியைச் சேர்ந்த நடராஜா லெட்சுமி என்ற 78 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார். சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad