இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில் நேற்று முதல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.அதன்படி நேற்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று (20) விலையில் மாற்றமின்றி அதே நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது
