Type Here to Get Search Results !

அடேங்கப்பா.. 372 % சொத்து குவித்தது எப்படி? பெண் காவல் ஆய்வாளருக்கு செக்..



பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் எட்டு ஆண்டுகளில் 372% அதிகமான சொத்துக்களை குவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு (Anti-Vice Squad)-இல் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் கே. ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் (Disproportionate Assets) குவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.

ராஜலட்சுமி 1999-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக (Sub-Inspector) காவல்துறையில் சேர்ந்தார். 2010-ஆம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர், சென்னையில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு உள்ளிட்ட முக்கியமான மற்றும் உணர்திறன் மிக்க பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரகசிய விசாரணையில், 2017 ஜூன் முதல் 2025 ஜூன் வரையிலான எட்டு ஆண்டு காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவரிடம் இருந்த சொத்து மதிப்பு: ரூ.3,64,310 2025 ஜூன் மாதம் அவரது சொத்து மதிப்பு: ரூ.4 கோடி 62 லட்சம் 65,529 (தனிப்பட்ட மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் உட்பட)

ஒட்டுமொத்தமாக ரூ.5 கோடி 42 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை குவித்துள்ளதாக DVAC கணக்கீடு தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் அவரது அறியப்பட்ட வருமானம் மற்றும் செலவுகளை கழித்த பின்னரும், 372% அதிகமான சொத்து சேர்க்கை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13, 2026) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை திருமங்களம் வெல்கம் காலனியில் உள்ள ராஜலட்சுமியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜலட்சுமி தரப்பில், "காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சிலரின் தூண்டுதலால் இந்த சோதனை நடத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் DVAC அதிகாரிகள், புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும், லஞ்சம் பெற்ற வழக்குகள், உயரதிகாரிகளுடனான தொடர்புகள் உள்ளிட்டவை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD