Type Here to Get Search Results !

யாழில் கொடூரம் : காணி பிரச்சனையால் ஒருவர் அடித்துக்கொலை

 

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை காரணமாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் காவல்துறையினர் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை (16)இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் பிரச்சனை முற்றி , கைகலப்பாக மாறியுள்ளது.அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கோப்பாய் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.அதேவேளை சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்கு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad