ஸ்வேதா ஷா பகிர்ந்த இஞ்சி, வால்நட்ஸ், வெல்லம் தேநீர் மாதவிடாய் வலி, எரிச்சல், சோர்வை இயற்கையாக குறைக்கும் எளிய மற்றும் ஊட்டச்சத்து முறை.மாதத்தின் 3 நாட்கள் பீரியட்ஸ் வலி, எரிச்சல் மற்றும் சோர்வு என பாடாய்படுத்திவிடும். வலியைப் போக்க நாம் பெரும்பாலும் வலி நிவாரணி மாத்திரைகளை நாடுகிறோம், ஆனால் உடனடி நிவாரணம் அளிக்கும் ஒரு மந்திர தேநீரை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இஞ்சி, வால்நட்ஸ் மற்றும் வெல்லம் ஆகியவற்றை வைத்து செய்யப்படும் இந்த தேநீர் பதற்றத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல் மனநிலை மாற்றங்களுக்கும் உதவும். ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா சமீபத்தில் இந்த செய்முறையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார், இது மாதவிடாய் வலியை இயற்கையாகவே குணப்படுத்த எளிதான வழி என் விளக்கினார்.
