2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (A/L) எழுதிய மாணவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு (ஏப்ரல் 14) முன்னதாகவே உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பெறுபேறுகளைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் தங்களது பெறுபேறுகளைப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பே இணையதளம் வாயிலாகப் பெற்றுக்கொள்ள முடியும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) தொடர்பான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன:
சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
சாதாரண தரத்திற்கான செய்முறைப் பரீட்சைகளை (Practical Exams) எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்முறைப் பரீட்சைகள் முடிந்தவுடன், சாதாரண தரப் பெறுபேறுகளையும் தாமதமின்றி விரைவாக வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
