பாரிய அழிவை ஏற்படுத்தும் மற்றுமொரு போர் ஏற்படும் பிரபல பெண் ஜோதிடர் அதிர்ச்சி அறிவிப்பு
எச்சரிக்கை..! ஈரானுக்கு அடுத்து "இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும்" தேதியை அறிவித்து பகீர் கிளப்பிய பிரபல பெண் ஜோதிடர்..!! நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய ஜோதிடர் ஒருவர் வெளியிட்டுள்ள கணிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. வரும் மார்ச் 21, 2026 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் என்று அவர் தனது காணொளியில் தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, அடுத்த இலக்கு பாகிஸ்தானாக இருக்கும் என்றும், அதன் தாக்கம் இந்திய எல்லைகளிலும் எதிரொலிக்கும் என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் போர் சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் மோதலால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கும் வேளையில், இந்த ஜோதிடரின் கணிப்பு மக்களிடையே ஒருவித தேவையற்ற பீதியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் இந்தக் காணொளி வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், இத்தகைய ஆதாரமற்ற கருத்துக்களுக்குச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. எந்தவிதமான புவிசார் அரசியல் ஆதாரங்களும் இன்றி, வெறும் கணிப்புகளைக் கொண்டு மக்களை அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு மற்றும் ராணுவத் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில், இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், தேவையற்ற பீதியைப் பரப்ப வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
