யாழ்ப்பாணத்தில் (Jaffna) தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ள நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நேற்று (17) பதிவாகியுள்ளது.
செம்பியன்பற்று - வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தய் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் கிடைத்துள்ளன. இரு ஆண் குழந்தைகள் மற்றும் இரு பெண் குழந்தைகள் அடங்குவதாக மருத்துவத் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் (Quadruplets) பிறப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த அபூர்வ நிகழ்வையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அந்த இளம் தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
