கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் – புத்தளத்தில் சம்பவம் தனது மனைவியுடன் புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் புத்தளம் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்துன் தாரகா என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்
