இன்று வங்கிகளுக்கு வரவிருக்கும் பணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

 அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தமாக 3.087 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ், அதே வயதுப் பிரிவைச் சேர்ந்த 72,525 பயனாளர்களுக்கு 362.6 மில்லியன் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. பயனாளர்கள் தங்களது வங்கி கணக்குகளுக்குச் சென்று இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் பண்டிகை கால செலவுகளைக் கருத்திற்கொண்டு, இந்த நிதியைத் தாமதமின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post