நாட்டு மக்களுக்கு இலங்கை பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

 


 இலங்கை பொலிஸ் சேவையில் இணைவதற்கான வயது எல்லை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பொலிஸ் திணைக்களம் விளக்கம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவிப்பு எண் 2482 மூலம் பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சாரதி பணியிடங்களுக்கு, மேலும் சிறப்பு அதிரடிப்படைக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையின் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், விண்ணப்பிக்க கடைசி திகதி 2026 மே 8 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வர்த்தமானி அறிவிப்பின்படி, பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பயிலுனர் பொலிஸ் சாரதி பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா பதவிகளுக்கும் வயது வரம்பு 28 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய தவறான தகவல்களை பரப்பியவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை பொருட்படுத்தாமல், அதிகாரப்பூர்வ அரசு வர்த்தமானி அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தகுதிகளுக்கு ஏற்ப மட்டுமே விண்ணப்பிக்கவும், பின்னர் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post