ஈரான் போர் மற்றும் உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என இந்திய அரசாங்கம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடரும் போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 122 டாலராக உயர்ந்துள்ளது.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், அதனைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமலாகும் என்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டன.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்துக் கூறுகையில்:
ஊரடங்கு குறித்த செய்திகள் அனைத்தும் போலியானவை. அத்தகைய எந்தவொரு திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இந்தியாவில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. விநியோகச் சங்கிலியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உலகெங்கும் விலை உயர்ந்தாலும், இந்திய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கலால் வரிகளைக் குறைத்து விலையை நிலையாக வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
