தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,766.53 டொலர்களாக விற்பனையாகின்றது. அதேநேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.25 டொலர்களாக விற்பனையாகின்றது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ளன. இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளமை இந்த விலை மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு! வெளியான முக்கிய தீர்மானம்
