வெந்தயத்தை இலேசாகப் பொடித்து இந்த எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இவை எண்ணெயில் ஊறும் போது இதன் எசன்ஸ் நன்றாக இறங்கச் செய்யும்.
கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் காம்பு நீக்கி இலைகளை அலசித் தண்ணீர் உலரும் வரை காயவிடவும்.
பிறகு அதைப்பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இவை ஊறும் போது இதன் பண்புகள் எண்ணெயில் இறங்கும்.
பிறகு கரிசலாங்கண்ணி மற்றும் நெல்லிக்காய் பொடி இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் எடுத்துப் பொடியாக நறுக்கி அதையும் எண்ணெயில் சேர்க்கவும்.
