அண்மையில் கொழும்பில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றன.
கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரின் வீட்டில் கபில உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பாரிய முறைகேடுகள் நடந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கபில கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கபிலவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது ராஜபக்ச தரப்புக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குற்றப் புலனாய்வு நிதி மோசடி பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் கபில மர்மமான நிலையில் உயிரிழந்தமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியின் போது மோசடியில் ஈடுபட்ட எவரையும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் மகிந்த கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பான வாதங்கள் தீவரம் பெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பூட்டிய அறைக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
.jpeg)