அம்பலாந்தோட்டை மாமடல பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நபர் ஒருவரை சுட்டுக் கொன்று, பின்னர் அவரது தலையை துண்டித்து தேவியின் சிலையில் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரர் முன்னர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 34 வயதுடைய ‘பொடி’ என அழைக்கப்படும் லக்மால் சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே அவரது பிறந்தநாளாகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உயிரிழந்தவர் கடந்த பெப்ரவரி மாதம் மாமடல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராக இருந்ததுடன், மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
.jpeg)