கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் எனவும், குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடி வைத்துள்ளவர் எனவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்த போது கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு (Brown) நிற ரீ-சேர்ட் அணிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)