யாழ்ப்பாணத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் ஒருவர், காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், விசாரணைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை காவல் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில், காவல் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை காவல்துறையினர் உடனடியாக மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
