கொல்கத்தா அருகே உள்ள மெடினிபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கணவன் கண்முன்னே தனது தனிப்பட்ட இ*த்தில் ஈடுபட்டு, மனரீதியாக அவரை துன்புறுத்திய மனைவிக்கு எதிராக கணவர் மேற்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கை பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். கணவர் பெயர் சுப்ரதோ முகர்ஜி. மனைவி பெயர் அஞ்சலி முகர்ஜி. இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் திருமண வாழ்க்கை சீராக நடக்கவில்லை.
அஞ்சலி தனது கல்லூரி நாட்களில் பழகிய நண்பர் ஒருவருடன் மீண்டும் தொடர்பு கொண்டு, அவருடன் வாழ விரும்புவதாக சுப்ரதோவிடம் பலமுறை கூறியிருக்கிறார். “எனக்கு விவாகரத்து வேண்டும். அந்த நண்பரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனால் சுப்ரதோவின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை. அஞ்சலியின் பெற்றோர்களும் “என்ன செய்தாலும் சரி, மீண்டும் எங்கள் வீட்டிற்கு வந்துவிடாதே” என தெளிவாக எச்சரித்திருந்தனர்.
மறுபுறம், அஞ்சலியின் கல்லூரி நண்பரின் குடும்பத்தினர் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால் முறையான விவாகரத்து ஆவணம் கண்டிப்பாக தேவை என நிபந்தனை விதித்திருந்தனர். அதற்கு அதிகபட்சம் ஆறு மாத அவகாசம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அஞ்சலி பலமுறை வீட்டை விட்டு வெளியேறி அந்த நண்பருடன் தங்கியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரது பெற்றோர்கள் அறிவுரை கூறி, முறையான விவாகரத்துக்குப் பிறகுதான் திருமணம் செய்ய முடியும் என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த அஞ்சலி, கணவர் சுப்ரதோவை மனரீதியாக தொந்தரவு செய்யும் விதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
அதில் ஒன்றுதான், கணவன் கண்முன்னே தனது தனிப்பட்ட இ**த்தில் ஈடுபடுவது. சுப்ரதோ உறவுக்கு அழைக்கும்போதெல்லாம் அஞ்சலி மறுத்துவிடுவார்.
ஆனால் ஆன்லைனில் மசாஜ் சாதனம் என வாங்கிய ஒரு பொருளைப் பயன்படுத்தி அடிக்கடி தனியாக இ**ம் அனுபவித்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் செயலை கணவன் முன்னிலையிலேயே செய்யத் தொடங்கினார். இது சுப்ரதோவை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கியது.
சுப்ரதோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தொழிலில் பயன்படுத்தப்படும் வெங்காரம் என்ற வேதிப்பொருளை அவர் கவனித்திருந்தார்.
அஞ்சலி பயன்படுத்தும் அந்த மசாஜ் சாதனத்தில் இந்த வெங்காரத்தை கரைத்து தடவி வைத்தார். இதை அறியாத அஞ்சலி, மீண்டும் கணவனை கோபப்படுத்தும் நோக்கத்தில் அந்தச் சாதனத்தை எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினார்.
சில நிமிடங்களிலேயே அவரது உறுப்பில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வலியால் துடித்துப் போனார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட கொடூரமான செயல் என கருதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அஞ்சலி, “இதில் என் கணவருக்குத் தொடர்பு இருக்க வேண்டும். அவர்தான் இதை செய்திருப்பார்” எனக் கூறினார். ஆனால் அதற்கு முன்பே சுப்ரதோ காவல் நிலையம் சென்று சரணடைந்திருந்தார். தான் செய்த செயலை ஒப்புக்கொண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் மேற்கண்ட அனைத்து விவரங்களும் வெளியே வந்தன.
காவல் துறையினர் இந்த வழக்கை விரிவாக விசாரித்து வருகின்றனர். மருத்துவ அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திருமண உறவில் ஏற்படும் மனரீதியான முரண்பாடுகள் எந்த அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
திருமண உறவில் கருத்து வேறுபாடுகள், மன உளைச்சல்கள் அல்லது நம்பிக்கை பிரச்சினைகள் ஏற்பட்டால், சட்டரீதியான வழிமுறைகளையும் குடும்ப ஆலோசனையையும் நாடுவதே சரியான தீர்வு. பழிவாங்கும் நோக்கில் செய்யப்படும் எந்தவொரு வன்முறை அல்லது தீங்கு விளைவிக்கும் செயலும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும், நிரந்தர உடல் மற்றும் மன பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும். உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் சட்டப்பூர்வமான தீர்வுகளே பாதுகாப்பான வழியாகும்.
