காதல் காரணமாக சிறைச்சாலையில் வாழ்க்கையை கழிக்கும், மருத்துவப் பீடத்திற்குத் தேர்வான மாணவி

 நீர்கொழும்பு சிறையில் இருக்கும் அந்த இளம்பெண்ணின் உண்மைக் கதை...

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையின் மீது நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது.

சட்டத்தின் பிடியில் சிக்கி, தங்கள் உரிமைக்காக கூரையின் மீது ஏறியிருந்த இளம் பெண்களில் ஒருவரின் முகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

"இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் இப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார்?" என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது.

அவரின் அழகைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த புன்னகையின் பின்னால் இதயத்தை உருக்கும் அளவுக்கு வேதனையான ஒரு வாழ்க்கைக் கதை மறைந்திருந்தது.

அவர் உண்மையில் குற்றவாளியா? அல்லது காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட ஒரு அப்பாவி பலியா?

அவரின் வாழ்க்கையை ஆராய்ந்த பத்திரிகையாளர் நாலிந்த தனரஞ்சன் எழுதிய பதிவின் தமிழாக்கம் இதோ.

"அவரின் கதை... ஏன் அவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டது? அவர் யார்?"

இங்கு அவரை "சந்துனி" என்று அழைப்போம். (இது அவரது உண்மையான பெயர் அல்ல; கற்பனைப் பெயர்.)

பதுளை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் கல்வி கற்றார். சிறுவயதிலிருந்தே படிப்பில் மிகவும் திறமையானவர். ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் சிறந்த பெறுபேறு பெற்று, கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் மேல்படிப்பிற்குச் சென்றார்.

அங்கு அவர் நீர்கொழும்பில் வசித்த தனது சிறியம்மாவின் வீட்டில் தங்கி படித்தார்.

படிப்பில் மட்டுமல்ல, நெட்பால் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். பல விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றார். உயர்தர வகுப்பு வரை சிறந்த மாணவியாகவும், மாணவர் தலைவராகவும் இருந்தார்.

நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை விரும்பிய அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது ஒரு WhatsApp குழு.

ஒரு நாள், நண்பிகள் தங்களது காதலர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர்களில் ஒருவரின் காதலனின் நண்பர் அந்த WhatsApp குழுவில் இணைக்கப்பட்டார். பின்னர் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவாகி, அது காதலாக மாறியது.

சில காலத்திற்குப் பிறகு, காதலன் அவரிடம், "நீர்கொழும்பில் இருக்கும் என் நண்பரிடம் ஒரு பார்சல் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வா" என்று கேட்டான்.

அந்தப் பார்சலில் போதைப்பொருள் இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

தன்னை அறியாமலேயே காதலன் அவரை போதைப்பொருள் கடத்த பயன்படுத்தியிருந்தான்.

உயர்தரத் தேர்வு முடிந்து, முடிவுக்காக காத்திருந்த காலத்தில் கூட அவர் அறியாமலேயே அந்தச் செயல்களில் ஈடுபட்டார்.

ஒருநாள் காவல்துறைக்கு தகவல் கிடைத்து, அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தான் முழுமையாக நம்பிய காதலனின் மீது வைத்த நம்பிக்கையால், தனது எதிர்காலத்தை முழுவதுமாக இழந்தார்.

பின்னர் தேர்வு முடிவுகள் வெளியானபோது தான் தெரிந்தது அவர் மருத்துவப் பீடத்திற்கு தேர்வாகியிருந்தார். ஒரு நாள் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவு கண்ட அந்த இளம்பெண், இன்று சிறைச்சாலையின் சுவர்களுக்குள் வாழ்ந்து வருகிறார்.

 பதுளையின் அழகிய மலைப்பகுதியில் பிறந்து, சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு பெண். குடும்பத்தின் கனவாக கொழும்பின் பிரபல பாடசாலைக்கு சென்றார்.

கல்வியிலும், விளையாட்டிலும் திறமையானவர். எதிர்காலத்தில் வெள்ளைக் கோட் அணிந்து, கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக வேண்டும் என்பதே அவரது கனவு.

ஆனால் வாழ்க்கை சில நேரங்களில் ஒரே ஒரு முடிவால் தலைகீழாக மாறிவிடுகிறது.

ஒரு WhatsApp குழுவில் தொடங்கிய பழக்கம், காதலாக மாறியது.அந்தக் காதலில் அவர் பார்த்தது அழகான எதிர்காலம்.காதலில் இருப்பவர்கள் தங்கள் துணையை கண்மூடித்தனமாக நம்புவது இயல்புதான்.அந்த நம்பிக்கையே அவரை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றது.

தான் எடுத்துச் சென்றது தனது எதிர்காலத்தையும், எண்ணற்ற குடும்பங்களின் வாழ்க்கையையும் சீரழிக்கும் போதைப்பொருள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அவரை மிகவும் திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு கருவியாக அந்தக் காதலன் பயன்படுத்தியிருந்தான்.

அறியாமலேயே நடந்த இந்தச் சம்பவம், காவல்துறைக்கு கிடைத்த தகவலால் முடிவுக்கு வந்தது.

கைது செய்யப்பட்ட அவர் இன்று நீர்கொழும்பு சிறையில், தனது உரிமைகளுக்காக மற்ற கைதிகளுடன் கூரையின் மீது நின்று குரல் கொடுக்கிறார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவு கண்ட கண்கள், இன்று சிறைச்சாலை