2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது
இதில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த தடையானது பரீட்சை நிறைவடையும் வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
