7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வெளியில் செல்லவேண்டாம்

 

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (13) வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு, பகல் வேளையில் சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதிய அளவு நீரை அருந்துமாறும், முடிந்தவரை நேரடி வெயிலில் அதிக நேரம் நிற்பதைத் தவிர்க்குமாறும், பகல் வேளையில் வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.