நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை 'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், இதன் விளைவுகள் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத காலப்பகுதியில் சக்திவாய்ந்த 'எல் நினோ' நிலைமை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் 80 சதவீதத்திற்கும் அதிகமாகக் காணப்படுவதாகத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மழைவீழ்ச்சி மீண்டும் குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
