உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

 


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எந்த விதத்திலும் கசியவில்லை எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிந்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை எனச் சுட்டிக்காட்டியுள்ளதோடு , இவ்வாறான வதந்திகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை எனவும் அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.