அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, இது குறித்து தீவிர விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 24ஆம் திகதி இரவு தேசிய அடையாள அட்டை இல்லாததால் கைது செய்யப்பட்ட தனது தந்தை, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், கைப்பேசியில் அடையாள அட்டையைக் காட்ட அருகில் அழைத்துச் செல்ல முயன்றபோதும், தன்னை அவமதித்துத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பொதுமகன் மதுபோதையில் வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலேயே கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யும் போது தப்பியோட முயற்சித்து, கீழே வீழ்ந்ததாலேயே அவருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
