2027 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப முறை குறித்த மேலதிக அறிவிப்புகளுக்காக, 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள், காத்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கோரியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பாடசாலை இட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் இணைய முறை மூலமே கோரப்படும்.
அத்துடன், அடுத்த ஆண்டு தரம் 6 இல் தமது பாடசாலைகளில் சேர விரும்புவோருக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களும் இந்த முறையின் ஊடாகவே சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தநிலையில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதிகள் மற்றும் செயல்முறை குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
