தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தவர் நடிகை மாளவிகா. 1999-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத் தேடி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானார்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் கதைக்களம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், மாளவிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் கிடைத்தது. டஸ்கி நிறமும், கவர்ச்சிகரமான கண்களும் இவருக்கு தனித்துவமான அழகை பரிசளித்தன.
ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தாலும், எதிர்பார்த்த அளவு படவாய்ப்புகள் இவரைத் தேடி வரவில்லை. தமிழில் படவாய்ப்புகள் குறைந்ததால், தெலுங்கு திரையுலகில் சில படங்களில் நடித்த மாளவிகா, மீண்டும் தமிழுக்கு திரும்பினார்.
சூர்யாவின் பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசனுடனும், சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடனும் இணைந்து நடித்தார்.
சித்திரம் பேசுதடி படத்தில் “வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்” பாடலில் தனது நடனத்தால் பட்டையைக் கிளப்பினார். ஜீவாவுடன் திருட்டு பயலே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும், மாளவிகாவுக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை.
அழகும் 2007-ம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷை திருமணம் செய்துகொண்ட மாளவிகா, மும்பையில் குடியேறினார். இவருக்கு ஆரவ் மற்றும் அன்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய மாளவிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இவரது கவர்ச்சியை பாராட்ட, மற்றவர்கள் “இந்த வயதில் இந்த கவர்ச்சி தேவையா?” என விமர்சித்துள்ளனர்.
திருமணத்திற்குப் பின் நீண்ட இடைவெளி விட்ட மாளவிகா, ஜீவா நடித்த கோல்மால் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, தன்யா ஹோப், பாயல் ராஜ்புட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் மாளவிகாவுக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நடிகை மாளவிகா, தனது அழகு மற்றும் நடிப்புத் திறமையால் குறுகிய காலத்தில் ரசிகர்களை கவர்ந்தவர்.
ஆனால், தொடர்ச்சியான படவாய்ப்புகள் இல்லாததால், சினிமாவில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், கோல்மால் படத்தின் மூலம் மீண்டும் திரையில் கவனம் ஈர்க்க முயற்சிக்கிறார்.
இவரது அடுத்தகட்ட பயணம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.