மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டியலைப் புதுப்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தரவுத்தளத்தை தயாரிக்கும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.