யாழ் மகளிர் இல்லமொன்றில் இளம் பெண் தவறான முடிவு..!

 யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 22 வயதுடைய யுவதி ஒருவர் ஆவார். அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ் மகளிர் இல்லமொன்றில் யுவதி தவறான முடிவு | Yuvathi Makes A Wrong Decision In A Jaffna Home

இறப்புக்கான காரணம் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அவரது சகோதரி ஒருவரும் அதே மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில்,   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.