வறுமைக்காக வேலை தேடி சென்ற தமிழ் பெண்கள் பலியான சோகம்..!

ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இதேபோல, ஓமலூர் அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, ஆமத்தூர் அருகேயுள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு காரணமாக விபத்து நேரிட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள் (51), விஜயமுருகன் மனைவி கலைச்செல்வி (33), கூமாபட்டியைச் சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி (45) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த பாக்கியலட்சுமி (58), ராமசுப்பு (43), லட்சுமி ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார், உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நேரிட்ட இடத்தில் எஸ்.பி. கண்ணன், சார் ஆட்சியர் பிரியா மற்றும் அதிகாரிகள் சாரணை மேற்கொண்டு, பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்தனர். மேலும், ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், மேலாளர் ராஜேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜேஷ், சுப்புராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post