தஞ்சை அருகே திருவோணத்தில் நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெய்வேலி தென்பகுதியில் உள்ள நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை அருகே திருவோணம் அருகே நெய்வேலி தென் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் இன்று சிலர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த குடோனில் வேலை பார்த்து வந்த ரியாஸ் என்ற 18 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். குடோனில் ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் சட்டவிரோதமாக இங்கு நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். எனினும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.