இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் நுழைவாயிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் மேற்கொள்ளுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டனைக்கு ஆளாக்கப்படலாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1. வாக்களிக்குமாறு இரந்து கேட்டல்
2. எவரேனும் தேருநரின் வாக்கை பரிந்து கேட்டல்
3. குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறி தேருநரை வசப்படுத்த முயலுதல்
4. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் விளம்பரங்கள், துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகள், புகைப்படங்கள் மற்றும் சின்னங்களை விநியோகித்தல் அல்லது காட்சிப்படுத்தல்.