இந்தியாவின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி என்ற இடத்தில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி வேனும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.