சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளுக்கு அமைவாகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.