திருமலையில் திடீரென பற்றி எரிந்த கடை-கண்கலங்கி நின்ற உரிமையாளர்..!{படங்கள்}

 திருகோணமலை, அனுராதபுரம் சந்தியில் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டும் கடையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்தின்போது கடைக்குக்குள்  இருந்த ஆறு வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.  

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

 சம்பவம் குறித்து திருகோணமலை - உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.