இந்த கொலை சம்பவம் இன்று வியாழக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.
இந்த பெண் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரைவிட்டு பிரிந்து மற்றுமொரு நபருடன் ஒன்றாக வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சம்பவத்தன்று வீட்டில் எவரும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.