மாங்குளத்தில் நேற்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஒருவர் அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணையில் கூறியுள்ளார் .
வீட்டில் ஆண்கள் யாரும் இருக்காத நிலையில் நிகழ்ந்த இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .