முல்லைத்தீவில் தனியார் காணியில் திடீரென முளைத்த புத்தர்; கிழித்து தொங்க விட்டது யார்?

 முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அண்மையில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம், முள்ளியவளை கல்லூரிக்கு அருகிலுள்ள தனியார் நிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் தனியார் காணியில் திடீரென முளைத்த பௌத்தம்; கிழித்து தொங்க விட்டது யார்? | Buddhism On Private Land In Mullaitivu

சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக அங்கு பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் வெசாக் தோரண அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இதில், “மகிந்த தேரரின் இலங்கை வருகை மற்றும் பௌத்த மத ஸ்தாபித்தலும்” எனும் வாசகத்துடன் பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் தனியார் காணியில் திடீரென முளைத்த பௌத்தம்; கிழித்து தொங்க விட்டது யார்? | Buddhism On Private Land In Mullaitivu

இந்நிலையில், நேற்று இரவு இனம்தெரியாத நபர்கள் அந்த பதாதையை கிழித்தெறிந்துள்ளனர். மேலும், பௌத்த தோரணம் அகற்றப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 முல்லைத்தீவில் தனியார் காணியில் திடீரென முளைத்த பௌத்தம்; கிழித்து தொங்க விட்டது யார்? | Buddhism On Private Land In Mullaitivu

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post