பூனையின் வியத்தகு செயல்-மிரண்டு போன இலங்கை பொலிசார்..!

ரிதிகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட இரண்டரை வயது பூனை, மாவனெல்லையில் உள்ள ஹெம்மாதகம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அங்கிருந்து 72 கிலோமீட்டர் பயணம் செய்து ரிதிகமவுக்குத் திரும்பியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


இந்த இரண்டரை வயது பூனையின் பெயர் “டுட்டு”. ரிதிகம முன்னாள் காவல் நிலையப் பொறுப்பதிகாரி ஹேமந்த சுபசிங்க அங்கு பணியில் இருந்தபோது, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்த ஒரு தெருப் பூனையை வளர்த்து, அதற்கு ‘டுட்டு’ என்று பெயரிட்டார்.

பின்னர், மன்னாரில் உள்ள அடப்பன் காவல் நிலையத்திற்கு அவர் மாற்றப்பட்டபோது, அவர் தனது உடமைகளுடன் ‘டுட்டு’ என்ற செல்லப் பூனையை ஹெம்மாதகமவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

பின்னர், சுபசிங்க மன்னாரில் அதிகாரப்பூர்வ வேலைக்காகச் சென்றிருந்தபோது, பூனை கடந்த மாதம் 6 ஆம் திகதி அந்தப் பூனை திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனது. 22 நாட்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் (27), ‘டுட்டு’ ரிதிகம காவல்துறை அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளது. அங்குதான் அந்தப் பூனை வளர்ந்தது. பூனையை செல்லமாக வளர்த்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர், அதை அடையாளம் கண்டு, சுபசிங்கவுக்கு இது குறித்துத் தெரிவித்தார்.

ஹெம்மாத்தகமவிலிருந்து 72 கிலோமீட்டர் தூரம் பயணித்து, மாவனெல்ல, ரம்புக்கன, மாவதகம போன்ற நகரங்களைக் கடந்து, ரிதிகமவுக்கு பாதுகாப்பாகத் திரும்பிய டுட்டு, எந்த ஆபத்தையும் சந்திக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று காவல் ஆய்வாளர் சுபசிங்க கூறினார். சரியான உணவு இல்லாததால் டுட்டு மிகவும் மெலிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post