காதலன் மீது உயிரையே வைத்த காதலிகளைத் தான் நமக்குத் தெரியும் ஆனால் காதலனை கொல்ல கசாயத்தில் விஷம் வைத்த கதையை கடந்த வாரம் தமிழக கேரளா பகுதியில் பார்க்க நேரிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மாவரைப் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி அபிதா (வயது 19), மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பள்ளி பருவத்தில் இருந்து உள்ளூர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அந்த இளைஞர், அபிதாவை பலமுறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு உடலுறவு கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இவர்களின் காதலுக்கு இளைஞரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, காதலனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய அபிதா, கடுமையான வயிற்றில் எதோ திடீர் மாற்றாம் ஏற்பட்டுள்ளது. கடுமையான வலியால் பாதிக்கப்பட்டு துடித்த அந்த மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அபிதாவின் பெற்றோர், அவரது காதலன் விஷம் கொடுத்து கொலை செய்ததாக நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அபிதாவின் மரணம் தொடர்பாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், சந்தேகத்திற்குரிய இளைஞரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.