இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி.. படிக்கட்டுக்கு அடியில் உயிருடன் மீட்பு..

 


Newyork : இரண்டு ஆண்டுகள் முன்பு, நியூயார்க் மாநிலத்தின் ஸ்பென்சர் நகரில், ஆறு வயது சிறுமி "பெய்ஸ்லி" வீட்டிலிருந்து மாயமானாள். அவளது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் வந்து விசாரித்தது. பொதுவாகவே எந்த வழக்காக இருந்தாலும் விசாரணையின் நடுவில், அல்லது இறுதியில் தான் ட்விஸ்ட் இருக்கும். ஆனால், இந்த வழக்கில் ஆரம்பமே பயங்க ட்விஸ்ட். புகார் கொடுத்த பெய்ஸ்லி-யின் உண்மையான தாய் இல்லை.பெய்ஸ்லி-யின் உயிரியல் தாய் என்றால்அது, கிம்பர்லி கூபர் (33) தான். பெய்ஸ்லி தத்தெடுக்கப்பட்டாளோ அல்லது விவாகரத்து சிக்கல் காரணமாகஅவள் தந்தையுடன் வளர வேண்டும் என கோர்ட் தீர்ப்பு கொடுத்ததோ என்று நமக்கு தெரியவில்லை. இதை அறிந்த போலீஸ்,பெய்ஸ்லி-யின் உண்மையான தாய்கிம்பர்லி கூபர் தான்பெய்ஸ்லிகடத்தியிருக்க வேண்டும் எந்த சந்தேகமடைந்தனர். உத்தரவுப்படி,கிம்பர்லி கூபர்பெய்ஸ்லியை வளர்க்க உரிமைஇல்லாதவர்கள். கிம்பர்லி கூபரைபோலீஸ் பலமுறை விசாரித்தது. "அவளைப் பார்க்கவில்லை, தெரியவில்லை" என்று ஒவ்வொரு முறையும் தவறாமல் சொன்னாள். ஆனால் உண்மை, ஒரு இரகசியமான இடத்தில் மறைக்கப்பட்டிருந்தது. 180 மைல் தொலைவில், சாகர்ட்டீஸ் என்ற நகரின் ஒரு பழைய வீட்டில்,கிம்பர்லி கூபரின் மாமனார், அதாவதுபெய்ஸ்லி-யின் தாத்தா கிர்க் ஷல்ட்டிஸ் (57) வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த திங்கள் கிழமை, போலீசுக்கு ஒரு இரகசியமான தகவல் வந்தது. "பெய்ஸ்லிஇங்கே இருக்கிறாள்!" என்று. உடனடியாக சர்ச் வாரண்ட் பெற்று, சாகர்ட்டீஸ் போலீஸ் அந்த வீட்டை நோக்கி புறப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்ததும், ஒரு மணி நேரம் தேடினர். படிக்கட்டுகள், அறைகள், மூலைகள் – எங்கும் இல்லை. ஆனால், அந்த படிக்கட்டுகளின் கீழ், மூடப்பட்டிருந்த இடத்தில், ஒரு சிறிய இடைவெளி இருந்தது. போலீசு அதைத் திறந்தனர். படிக்கு கீழே இருந்த கதவை திறந்தது, இருட்டில் ஒளிர்ந்த இரு உருவங்கள்!அந்த வீட்டின் படிக்கட்டுகளின் கீழ், ஒரு இருண்ட, ஈரமான அறை – ஒரு தற்காலிகமான மறைவிடம் – அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, உலகம் மறந்து, ஒரு தாயும் மகளும் முடங்கியிருந்தனர். கிம்பர்லி, தன் மகளை இறுகப் பற்றியிருந்தாள். ஈரமான, இருண்ட அந்த இடத்தில், அவள் பயந்து நடுங்கினாள். பெய்ஸ்லி, இரண்டு ஆண்டுகளின் சோகத்தைத் தாங்கியபடி, அமைதியாக இருந்தாள்."அவளை விட்டுவிடுங்கள்!" என்று போலீஸ் கத்தியது. சிறுமியை வெளியே இழுத்து வந்தனர். போலீசு தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றனர். பாரமெடிக்ஸ் பரிசோதித்தனர். அதிசயம்! அவள் ஆரோக்கியமாகவும், நன்றாகவும் இருந்தாள். உடனடியாக, அவளது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் விட்டுக்கொடுக்கப்பட்டாள். அந்த சந்திப்பு, ஒரு குடும்பத்தின் மீண்டும் இணைவைப் போல இருந்தது – கண்ணீரும் சிரிப்பும் கலந்து. ஆனால், அந்த முடிவு இன்னும் முழுமையடையவில்லை. கிம்பர்லியும், அவரது கணவர் கிர்க் ஜூனியரும், தாத்தா கிர்க் ஷல்ட்டிஸும் கைது செய்யப்பட்டனர். குழந்தை பாதுகாப்பு தொடர்பான தடையும், குழந்தையின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தியதும் என்பதில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்த இருட்டு அறையின் ரகசியம், இப்போது ஒளியில் வெளிப்பட்டது. பெய்ஸ்லியின் வாழ்க்கை, மீண்டும் தொடங்கியது – ஒரு புதிய அத்தியாயத்துடன். இந்தக் கதை, ஒரு சிறுமியின் தைரியத்தையும், உண்மையின் வெல்லும் தன்மையையும் நினைவூட்டுகிறது. இரண்டு ஆண்டுகளின் இழப்புக்குப் பின், ஒரு மீட்பு – அது ஒரு அற்புதம். சட்டப்பூர்வ பெற்றோர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. சிறையில் இருந்து வெளிய வந்தது போன்ற உணர்வில் அவர்களை கட்டித்தழுவினாள்பெய்ஸ்லி.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.