வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. கடந்த 25 ஆம் தேதி அறுகம் விரிகுடா பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர் இந்த விடயம் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் பொத்துவில் காவல் நிலையத்தை 063 2248022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது பொத்துவில் காவல் நிலைய பொறுப்பதிகாரியை 071 8591168 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது
