எரிபொருளை பதுக்கும் மக்கள் சற்றுமுன் பொலிஸாருக்கு அதிரடி அறிவிப்பு சிக்கப்போகும் பலர்

 

இலங்கையில் எரிபொருளை போத்தல் மற்றும் கொள்கலன்களில் எரிபொருளை வழங்காமல் இருக்க எரிபொருள் நிலைய மேலாண்மைத்துவத்துடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தேவையான அளவில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இருப்பினும், சில தரப்பினர் திட்டமிடப்பட்ட வகையில் போத்தல்கள் அல்லது பிற வெளிப்புறக் கொள்கலன்களில் எரிபொருளை சேகரித்து வருகின்றனர்.

இத்தகைய செயல்களைத் தடுக்க மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், பணியிடங்கள், விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்குத் தவிர மீண்டும் அறிவிப்பு வழங்கப்படும் வரை, கொல்களன்கள், போத்தல் அல்லது வேறு பொருட்களில் எரிபொருளை வழங்காமல் இருப்பதற்கு எரிபொருள் நிலைய மேலாண்மைத்துவத்துடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளை சேகரித்து கையிருப்பில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் எரிபொருள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து விசாரணை செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு எச்சரித்துள்ளது. 


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post