படுக்கையில் பொட்டுத்துணி இல்லாமல் மருமகள்! உடன் இருந்த நபரை பார்த்த மாமியார்! அரங்கேறிய அசிங்கம்!

 

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி ஜங்ஷனில் அமைந்திருந்த ஒரு சாதாரண குடும்பம். லோகேஷ் (35), அவரது மனைவி மைத்திலி (28), அவர்களது 6 வயது மகள் மற்றும் லோகேஷின் தாயார் மயிலாத்தாள் (75) – இவர்களுடன் நிறைந்திருந்தது அன்பும் அமைதியும்.

லோகேஷ் ஒரு உள்ளூர் அரசியல் கட்சியில் செயல்பட்டு வந்தார். அரசியல் பணிகளுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து, குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொண்டார்.

மைத்திலி ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவாக வேலை பார்த்தார். காலை 9 மணிக்குச் சென்று மாலை 5 மணிக்குத் திரும்பி, குழந்தையை அரவணைத்து வாழ்ந்தனர்.

மயிலாத்தாள் அந்த வீட்டின் ஆத்மா. மெதுவாக நடந்து, வீட்டு வேலைகளைச் செய்து, பேத்தியுடன் நேரம் கழித்தார். யாருடனும் சண்டையிடாத, அன்பு மட்டுமே பரிமாறிய ஒரு நல்ல மாமியார்.

ஆனால், இந்த அமைதியான வாழ்க்கையில் ஒரு இருண்ட நிழல் படர்ந்தது.

மைத்திலி தனது நிறுவனத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த மேனேஜர் நாகேஷ் (25) உடன் பணி தொடர்பாக அடிக்கடி பேசினார். அது மெல்ல மெல்ல காதலாக மாறியது.

வீடியோ கால்கள், ரகசிய சந்திப்புகள், ஓயோ ஹோட்டல்கள் – எல்லாமே தொடங்கியது. நாகேஷ் அடிக்கடி கோயம்புத்தூர் வந்து மைத்திலியைச் சந்தித்தான்.

லோகேஷ் சந்தேகம் கொண்டார். மனைவியின் போனைப் பார்த்தபோது அதிர்ச்சி. ஆபாச புகைப்படங்கள், ரகசிய உரையாடல்கள். அவர் மைத்திலியை எச்சரித்தார். “இதை விட்டுவிடு. குடும்பத்தை காப்பாற்று. நான் உன்னை மன்னிக்கிறேன்,” என்றார். மைத்திலி ஒப்புக்கொண்டதாகக் காட்டினாள். ஆனால், தொடர்பு துண்டிக்கப்படவில்லை.

கொலையின் திட்டம்

2025 ஏப்ரல் 5-ம் தேதி. லோகேஷ் மதுரைக்கு கட்சி மீட்டிங்குக்கு சென்றிருந்தார். மைத்திலி நாகேஷை வீட்டுக்கு அழைத்தாள். “வீடு பாதுகாப்பானது. ஹோட்டலுக்கு காசு செலவில்லை,” என்றாள்.

நாகேஷ் வந்தான். இருவரும் மைதிலியின் வீட்டிலேயே ஒரு அறையில் ஆடையின்றி உல்லாசமாக இருந்தனர், வேலைகள் வேகமெடுத்தன, உல்லாச கடலில் மூழ்கி கொண்டிருந்த மைதிலி தன்னை மறந்து முனக தொடங்கினாள்.

மயிலாத்தாள் சத்தம் கேட்டு எழுந்தார். “என் மகன் மதுரையில் இருக்கிறானே, இங்கு யார்?” என்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது அதிர்ச்சி, மருமகள் மைதிலி வேறு ஒரு ஆணுடன், அவனின் கைகள் மைதிலியின் அழகுகளை பற்றியிருந்தன.. கோபம் பொறுக்காமல் மைதிலி என்று கத்தியபடி கதவைத் தட்டினார்.

பயந்த மைத்திலி ஒன்று தெரியாதவள் போல வெளியே வந்தாள். மயிலாத்தாள் ஏற்கனவே உள்ளே இருந்த நபரை பார்த்துவிட்டார். “யார் இவன்? என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. இரு மவனுக்கு போன் பண்றேன்..” என்றார். இருவரும் பயந்தனர்.

பயத்தில், மயிலாத்தாளின் வாயை மைதிலி மூட, கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். உடலை படுக்கையில் போட்டு, போர்வை போர்த்தி, ஹார்ட் அட்டாக் என்று நாடகமாடினர்.

குழந்தையை எழுப்பி, “பாட்டி எழுந்திருக்கலையே!” என்று சொல்லி, அழுது நாடகமாடினாள் மைதிலி. ஊர் மக்கள் வந்து அழுதனர். நல்லா தானே படுத்தாங்க.. ரொம்ப நேரமா தூங்கிட்டு இருக்காங்கன்னு எழுப்புனேன்.. எழுந்திருக்கவே இல்லையே.. என்று கண்ணீர் சிந்தினால் மைதிலி.

லோகேஷ் ஓடிவந்து தாயை இழந்து துடித்தார். எல்லோரும் இயற்கையான மரணம் என்று நம்பினர்.

இரண்டாவது கொலை முயற்சி

தற்போது தன்னுடைய தகாத உறவுக்கு தடையாக இருக்கும் கணவர் லோகேஷை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினாள். மைத்திலிக்கு தைரியம் வந்தது. “அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்.. என்று சொல்லி தப்பித்து விட்டோம்.. இவருக்கும் அப்படியே செய்யலாம்,” என்று நினைத்தாள்.

அக்டோபர் 29-ம் தேதி நாகேஷை மீண்டும் அழைத்தாள். அயர்ந்து தூங்கும் லோகேஷின் முகத்தில் தலையணையால் அழுத்தச் சொன்னாள்.ஆனால், லோகேஷ் தூக்கத்தில் எழுந்தார். போராடினார். கத்தினார். மைத்திலி ஓடிவந்தாள். நாகேஷ் தப்பி ஓடினான்.


உண்மை வெளியே

லோகேஷ் போலீஸிடம் புகார் செய்தார். விசாரணையில் சிசிடிவி, போன் ரெக்கார்டுகள், ஜிபிஎஸ் – எல்லாமே மைத்திலியையும் நாகேஷையும் சுட்டிக்காட்டின. போலீஸ் விசாரித்தபோது, மயிலாத்தாள் கொலை விவரங்கள் வெளியாகின. மைத்திலியும் நாகேஷும் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் உள்ளனர்.

இழப்புகள்

ஒரு கள்ளக்காதலுக்காக, ஒரு அன்பான பாட்டி கொல்லப்பட்டாள். ஒரு குழந்தை தாயை இழந்தாள். நாகேஷின் மனைவி தனி மரமானால், அவனின் இரு பெண் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை இழந்தனர். லோகேஷ் தாயை மட்டுமல்ல, மனைவியும் சிறைக்கு செல்ல.. தற்போது, குழந்தையுடன் தனிமையில் நிற்கிறார்.

காதல் என்ற பெயரில் தவறான உறவு தொடங்கியது கொலையில் முடிந்தது. குடும்பத்தை விடவா காமம் பெரிது...? இந்தக் கதை நமக்கு ஒரு பாடம் – எந்த காரணத்துக்காகவும் வாழ்க்கைத்துணைக்கு துரோகம் செய்யக்கூடாது.


பிடிக்கவில்லை என்றால் விவாகரத்துக்கு சட்டம் அனுமதிக்கும் போது, அவர்களுடன் வாழ்ந்து கொண்டே, இன்னொருவரோடு படுக்கையை பகிரும் கொடூரம் வேண்டாம். குடும்பத்தை இழக்க வேண்டாம். சமுதாயம் என்ற கோட்டையின் செங்கற்கள் தான் குடும்பங்கள் என்றால் ஒழுக்கம் தான் செங்கற்களை இணைக்கும் சிமெண்ட் கலவை எனலாம்.


ஒழுக்கம் தவறினால், செங்கல் தவறும், செங்கல் தவறினால் சமுதாயம் வலுவிழக்கும். சமுதாயம் காப்போம்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post