வங்கிகளில் கடன் வாங்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

 

தொழில்துறையை வலுப்படுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2026ஆம் ஆண்டில் தொழில்முனைவோருக்கு சமீபகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான கடன்கள் வழங்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூர் தொழிலதிபர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், நிதி பெறுவதற்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தொழில்முனைவோர் கடனை எளிதாக்குவதற்காக 2025 ஆம் ஆண்டில் ரூ. 87 பில்லியன் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் நடவடிக்கைகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களைச் சமாளிக்க, நில வங்கிகளை நிறுவுமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம் தொடர்பில் சரியான தகவல்களைத் தெரிந்து கொண்டு, முறையான விண்ணப்பப் பதிவை மேற்கோண்டு சலுகைகளை பெற்றுக் கொள்ளுமாறு அரச தரப்பிலிருந்து கடன் பெறுவோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

சில வங்கிக் கிளைகள் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம் குறித்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கிளை இலாபங்களை அதிகரிக்கும் மாற்றுத் திட்டங்களை நோக்கி அவர்களை தூண்டுவதாக கவலைகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சலுகைக் கடன் திட்டம் தெளிவான செயல்முறையுடன் செயலில் இருப்பதுடன், அணுகக்கூடியதாகவும் உள்ளது. மார்ச் மாத நிலவரப்படி, வங்கிகள் ரூ. 7.2 பில்லியன் மதிப்புள்ள 630 விண்ணப்பங்களைச் செயல்படுத்தியுள்ளன.

அதே நேரத்தில் கடன் உத்தரவாத நிறுவனம் 267 பிணையமில்லாக் கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த முன்னேற்றம் ரூ. 17.4 பில்லியனை எட்டியுள்ளது. மேலும் வணிகங்களுக்காக ரூ. 95 பில்லியன் மொத்த ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி, எச்.என்.பி மற்றும் என்.டி.பி உள்ளிட்ட சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் ஒதுக்கீடுகளை நிறைவு செய்துள்ளன. ஆனால் நிதி அமைச்சகம் அடுத்த காலாண்டில் கூடுதல் நிதியை வெளியிடும். தவறான கூற்றுக்கள் இருந்தபோதிலும் 1300க்கும் மேற்பட்ட தனிநபர்கள் வெற்றிகரமாகப் பிணையமில்லாக் கடன்களைப் பெற்றுள்ளனர்.

எனவே தொழில்முனைவோர் இது தொடர்பான சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான முறையை விவரிக்கும் விவரங்களை அவர் வழங்கியுள்ளார்.

அதன்படி பிரதேச செயலகத்திலிருந்து உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெறவும். விண்ணப்பப் படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்கவும். ஆய்வுக்குப் பிறகு, செயல்முறையைத் தொடங்குவதற்காக வங்கி அந்த விண்ணப்பத்தை டிஜிட்டல் அமைப்பில் உள்ளிட வேண்டும்.

வங்கி, தனது ஆரம்பகட்ட ஆய்வுக்குப் பிறகு, விண்ணப்பதாரரை நிதி அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கும். நிதி அமைச்சகம் இரண்டு வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். 



قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


الأحدث
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post