இலங்கை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி பரீட்சை ஆணையாளர் சுப்ரமணியம்பிள்ளை விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பல்கலைக்கழங்களுக்குள் உள்நுழைவதற்கு ஏனைய நாட்டு மாணவர்களுக்கு தெரிவு பரீட்சை நடத்தப்படுகின்ற போதிலும், இலங்கை மாணவர்களுக்கு அவ்வாறு எந்தவித பரீட்சைகளும் நடத்தப்படுவதில்லை .
மாறாக, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவதாக பரீட்சை திணைக்களத்தின் பிரதி பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
