குருணாகல் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த களனி குமாரி என பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவருமில்லாமல் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மீனகயா அதிவேக தொடருந்துடன் அது மோதவிருந்த பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எதிர்பாராத விபத்து பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தொடருந்து திணைக்களம் தற்போது சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மறுநாள் காலை குருணாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இந்த தொடருந்து, வழக்கம் போல இரவு நேரத்தில் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது தொடரூந்தின் பிரேக் செயலிழந்ததால், அது எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி பொத்துஹெர திசையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கியுள்ளது.
தொடருந்து நிலையத்தில் எவருமின்றி தொடரூந்து முன்னோக்கி சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற பின்னரே அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
உடனடியாக செயல்பட்ட தொடருந்து நிலைய அதிபர் உள்ளிட்ட ஊழியர்கள் தொடரூந்தை நிறுத்த கடுமையாக முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்தன.
.jpeg)