யாழ்ப்பாணம், காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
கடற்கரைக்குச் சென்றவர்கள் அங்கு சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
